Donate
❤
Ask your question
Kural list
About us
Donate
❤
அறத்துப்பால்
·
நிலையாமை
·
(அதிகாரம் 34)
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
“Why should the soul seek a temporary shelter in the perishable body? Is there not a durable habitation for it?”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம்<br>கிடையாது.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால்,
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
— சாலமன் பாப்பையா
← குறள் 339
அதிகாரங்கள்
குறள் 341 →