Donate
❤
Ask your question
Kural list
About us
Donate
❤
அறத்துப்பால்
·
வான்சிறப்பு
·
(அதிகாரம் 2)
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
“If the clouds were to withhold rain not even a blade of grass would rustle on earth.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
— சாலமன் பாப்பையா
← குறள் 15
அதிகாரங்கள்
குறள் 17 →