Donate
❤
Ask your question
Kural list
About us
Donate
❤
அறத்துப்பால்
·
பிறனில் விழையாமை
·
(அதிகாரம் 15)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
“He who invades (easily) the house of another thinking it a mere trifie will incur eternal infamy.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
— சாலமன் பாப்பையா
← குறள் 144
அதிகாரங்கள்
குறள் 146 →