காமத்துப்பால்உறுப்புநலனழிதல் (அதிகாரம் 124)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
“Your pallid eyes streaming with tears proclaim the callousness of your lord.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!
— சாலமன் பாப்பையா
குறள் 1232 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook