Donate
❤
Ask your question
Kural list
About us
Donate
❤
அறத்துப்பால்
·
செய்ந்நன்றி அறிதல்
·
(அதிகாரம் 11)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
“Forget not the companionship of the pure of heart. Give up not the friendship of those who have stood by you in hour of sorrow.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
— சாலமன் பாப்பையா
← குறள் 105
அதிகாரங்கள்
குறள் 107 →